Breaking News

வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! யார் விண்ணப்பிக்கலாம் எப்படி விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுக்கு ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது



இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள வட்டார கல்வி அலுவலர் பணிக்கான நேரடித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உடையவர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை 5ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் செப்.10ம் தேதி நடைபெறும் என்றும் இந்த எழுத்து தேர்வு நடைபெறும் தேதி தற்காலிகமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க:-

https://www.trb.tn.gov.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback