வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்து பெண்ணை துணிச்சலாக கயிறு கட்டி மீட்ட இளைஞர்கள் திக் திக் வீடியோ
ஹரியானாவில் கனமழையால் காக்கர் ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்ப்பட்டது அப்போது சாலையில் சென்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லவெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்த பெண்ணை துணிச்சலாக கயிறு கட்டி மீட்ட இளைஞர்கள் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது
இந்தியாவில் வடமாநிலங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகின்றது இந்நிலையில் ஹரியானாவின் அம்பாலா, ஹிசார், பஞ்ச்குலா, கர்னால் மற்றும் நர்னால் ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது இதனால் அங்கு கடும் வெள்ள பெறுக்கு ஏற்பட்டுள்ளது, ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றது,
இந்நிலையில் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள காரக் மங்கோலி என்ற பகுதியில் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலையில் சென்ற கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காரில் இருந்த அந்த பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரேன் உதவியுடன் வாகனத்தை ஆற்றில் இருந்து அகற்றும் முயற்சி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பலருக்கும் மிரட்சியை ஏற்படுத்துகிறது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Shahidarafi51/status/1672872659846328320
https://twitter.com/_whatsinthenews/status/1672938132873019394
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ