Breaking News

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் மீண்டும் உயர்கிறது ? காரணம் என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வு அடைந்ததால், மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்து இருப்பதால், அடுத்த மாதம் முதல் கட்டணம் உயர வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது



கடந்த ஆண்டில் மின் ஆணையம் பிறப்பித்த மின் கட்டண உயர்வு ஆணையில், 2027 ஆண்டு வரை ஆண்டுதோறும் பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம், இரண்டில் எது குறைவோ, அந்த அளவு மின் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தாண்டு ஏப்., மாதத்தில் பணவீக்க விகிதம், 4.70 சதவீதமாக உள்ளது. அதாவது, தற்போதுள்ள யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதில் 4.70 சதவீதம் உயரும் வாய்ப்பு உள்ளது

இந்நிலையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

தமிழ்நாட்டில் நுகமாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி 2026-2027-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்துவதில் இருந்தும் விலக்கு பெற அரசு நடர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. 

10 மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும் ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின்சார கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லி மாளாது. எனவே மின்சார கட்டணத்தை ஜூலை வடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback