Breaking News

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - வீடியோ

அட்மின் மீடியா
0

மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டதால், கரக்பூர் - பங்குரா - ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரம்



மேற்கு வந்த மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மேற்கு வங்கம் மாநிலம் பன்குரா பகுதியில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒன்டா ரயில் நிலையத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டதில் 12 பேட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தின் காரணமாக் கரக்பூர்-பங்குரா-ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்தில் குவிந்துள்ள மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு சரக்கு ரயில்கள் நெருக்கு மோதி விபத்துக்குள்ளான சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Assam_Social/status/1672808071549321218

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback