Breaking News

அரபிக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புயல் வானிலை ஆய்வு மையம் Cyclone Biparjoy

அட்மின் மீடியா
0

தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி உருவாகி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. 

ஜூன் 7ம் தேதிக்குள் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது மேலும் இந்த காற்றழுத்த தாழ்மண்டலம் தற்பொழுது மேற்கு தென்மேற்கு கோவாவிற்கு 920 கிலோமீட்டர் தொலைவிலும் தெற்கு தென்மேற்கு மும்பைக்கு 1120 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்து 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் புயலாக வலுப்பெற கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக உருவானால், அதற்கு “பைபர்ஜோய் புயல்” என்று பெயர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளா தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது . மத்திய கிழக்கு அரபிக்கடலில் தாழ்வு தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் .காற்றழுத்த தாழ்வு பகுதி மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


by Web EditorJune 6, 2023020SHARE0தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback