Breaking News

ஜூன் 14 ம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது


அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஜூன் 1ல் திறக்க இருந்த பள்ளிகள் வெயில் காரணமாக ஜூன் 7க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை, கடந்த 4 நாட்களாக வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே பள்ளி திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்தது

அதன்படி, பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்  

இந்த நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 

1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback