கண் பார்வையற்ற இஸ்லாமிய குடும்பத்திற்க்காக சாலையில் லா இலாஹ இல்லல்லாஹ் பாடிய 10 வகுப்பு மாணவி ஆதிரா வைரல் வீடியோ La ilaha illallah Adira a student who sang on the road
கேரள மாநிலம் பாலக்காட்டில் 10 வகுப்பு மாணவி ஆதிரா ஏழை பெண்ணுக்காக சாலையில் மனிதாபிமானத்துடன் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த போத்துக்கல் கத்தோலிக் மேல்நிலைப்பள்ளியில் ஆதிரா என்ற மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்
கடந்த 3 ம் தேதி தந்தையுடன் கடை தெருவுக்கு சென்றவர் அங்கு பார்வையற்ற முஸ்லீம் பெண் தனது கை குழந்தை மற்றும் பார்வையற்ற கணவருடன் நின்று பாட்டுப்பாடி யாசகம் கேட்டுக்கொண்டு இருந்து உள்ளார்.
இந்த நிலையில் பாட்டுப் பாடிக்கொண்டு இருந்த அந்த ஏழை பெண்ணுக்கு உதவி செய்ய அவருக்கு பதிலாக சிறுது நேரம் தான் பாட முடிவெடுத்து தனது தந்தையிடம் கூறிசென்று அந்த கண் பார்வையற்ற குடும்பத்திற்க்கு தேநீர் வாங்கிக்கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி அவரிடம் அனுமதி கேட்டு மைக்கை எடுத்து இஸ்லாமியர்களின் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற பாடலை பாடி உள்ளார்.
ஆதிரா பாடுவதை வீடியோ பதிவு செய்த ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட தற்போது வைரலாகி பேசும் பொருள் ஆகி உள்ளது
ஆதிரா பாடிய லா இலாஹ இல்லல்லாஹ் பாடல் பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ