CBSE தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற செய்தி பொய்யானது CBSE விளக்கம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
நாளை சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி உண்மையல்ல என சி.பி எஸ்.இ ட்விட்டரில் பதிவு!
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. அதே போல் CBSE 12-ஆம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டன.
இந்நிலையில் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் என்று வெளியிடப்படும் என்று இது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை
இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என இணையத்தில் வெளியான அறிக்கை போலியானது என CBSE ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது.
Tags: கல்வி செய்திகள்