Breaking News

தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது.! மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகமால் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் மால்களில் இந்த திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் நர்சாக இருக்கும் ஒரு கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு  கேரள முதல்வரான பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். 

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை திரையிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாநில உளவுதுறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார்கள் இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன

இந்நிலையில் சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது.சென்னை அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தி கேரளா ஸ்டோரி படம்  5ம் தேதி வெளியானது. தமிழகத்தில் மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ படம் இன்று  திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளனர். திரையிட எழும் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை & பெரிய வசூல் இல்லாததால் திரையிட வேண்டாம் என உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback