கள்ளச்சாராய விற்பனை குறித்து புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!!
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.என தமிழக அரசு தெரிவித்துள்ளது
மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பித்தது.
கள்ளச்சாராயம், விஷச்சாராயம் மற்றும் அயல் மாநில மதுபானங்கள் விற்பனை குறித்து புகார் அளிக்க போலீசார் தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 9445463494, 9498111155 என்ற எண்ணிலும்,
திருவள்ளூர் மாவட்டத்தில் 6379904848 என்ற எண்ணிலும்
விழுப்புரம் மாவட்டத்தில் 9042469405” என்ற வாட்சப் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்