துப்பாக்கி காட்டி நகைகடையில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் இரும்பு ராடை கொண்டு துரத்திய உரிமையாளர் சிசிடிவி வீடியோ
மும்பையில் நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முடிந்த கொள்ளையர்களை இரும்பு ராடை கொண்டு விரட்டி அடித்த நகைக்கடை உரிமையாளர் சிசிடிவி வீடியோ
மும்பை மிரா சாலையில் மாஸ்க் அணிந்த இருவர் முதுகில் கருப்பு பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு கோதாரி என்கிற நகை கடைக்குள் நுழைந்துள்ளனர்.
அப்போது கடையின் உள்ள மோஹித் என்ற நபர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். மோதிரம் வாங்குவது போல் கூறி, டிசைன்களை காட்ட சொல்லியுள்ளனர் கடைக்கு வந்திருந்த முகமுடி அணிந்த நபர்கள். பின் கண் இமைக்கும் நொடியில் முகமுடி நபர்களில் ஒருவர் தனது கையில் துப்பாக்கியை எடுத்து கடையில் இருந்த நபரை மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது கையில் இரும்பி கம்பி ஒன்றை எடுத்த கடைக்காரர் முகமுடி நபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் துப்பாக்கியை காட்டி மிரட்டியபோதும் அஞ்சாத அவர் அலாரத்தை அடிக்க உடனடியாக கொள்ளை முயற்சி செய்தவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நயா நகர் காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி,
கொள்ளையர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மீரா ரோடு, செக்டர் 4, சாந்தி நகர், எஸ் குமார் தங்க கடைக்கு வந்தனர். கடைக்குள் புகுந்த அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க தொடங்கினர். கடை உரிமையாளர் எச்சரிக்கை விடுத்ததையடுத்து மர்மநபர்கள் தப்பியோடினர்.
அவர்களில் இருவர் பைக்கில் தப்பிக்க முடிந்தது, மீதமுள்ளவர்கள் முயன்றனர் ஆனால் மற்ற மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. இதனால், அவர்கள் மீரா ரோடு ரயில் நிலையம் நோக்கி நடந்தே ஓடி தப்பினர்.அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Vasanth56540556/status/1663174379101093888
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ