Breaking News

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராகவும், நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக டாக்டர் பி. செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக டி.ஜெகன்நாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி செயலாளர் பி.அமுதா உள்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளராக இருந்துவந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத்துறை செயலாளராக இருந்த டாக்டர் கே.கோபால் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த கே.நந்தகுமார் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுப்பணித்துறை செயலாளராக டாக்டர் சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback