Breaking News

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றோர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ் நாடு வக்பு வாரியத்தில், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒப்பந்தப் அடிப்படையில் மாவட்ட வாரியாக ஓராண்டு பணியாற்றிட கீழ்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



வக்பு வாரியத்தில், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒப்பந்தப் அடிப்படையில் மாவட்ட வாரியாக ஓராண்டு பணியாற்றிட கீழ்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (1) துணை ஆட்சியர் -1 பணியிடம் - மாத ஊதியம் ரூ.40,000/- (சென்னை)

(2) வட்டாட்சியர் -11 பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.40,000/- (3) துணை வட்டாட்சியர் கண்காணிப்பாளர்-11 பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.30,000/- +ரூ.5,000/- பயணப்படி (4) வருவாய் ஆய்வாளர்-11 பணியிடங்கள் மாத ஊதியம் ரூ.25,000/- (சென்னை, பூந்தமல்லி, வேலூர், கடலூர், திருச்சி, இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர். கோயமுத்தூர். மதுரை மற்றும் திருநெல்வேலி சரகங்கள்)

(3) கிராம நிர்வாக அலுவலர்-38 பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.20,000/- (அனைத்து மாவட்டங்கள்)

மேற்கண்ட பணியிடங்களுக்கு தங்களது விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க 15.06.2023 மாலை தகுதியானவர்கள் 5.00 மணிக்குள் tnwb@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback