Breaking News

ஒகேனக்கலில் சாலை ஓரம் நின்ற யானையிடம் வம்பு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஒகேனக்கல் அருகே யானையை தொந்தரவு செய்து வீடியோ எடுத்த போதை ஆசாமி வைரல் வீடியோ


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சாலையில் போதையில் ஒருவர் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த காட்டு யானைக்கு வணக்கம் தெரிவித்தும் இரண்டு கைகளை தூக்கியவாறு யானையிடம் சரண்டர் ஆவது போல போஸ் கொடுத்து யானையை அச்சுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் பென்னாகரம் - ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் வால்வுகளில் இருந்து வெளியேறும் நீரை குடித்துவிட்டு சாலையின் அருகில் நிற்பது வழக்கம். 

இந்நிலையில் சாலையோரம் நின்ற யானையை கண்ட சுற்றுலாப் பயணி ஒருவர், மது போதையில் யானைக்கு மிக அருகில் சென்று காட்டு யானைக்கு வணக்கம் தெரிவித்தும் இரண்டு கைகளை தூக்கியவாறு யானையிடம் சரண்டர் ஆவது போல போஸ் கொடுத்து யானையை

அங்கு இருந்த அந்த யானை போதை ஆசாமியை எதுவும் செய்யாமல் அவர் செய்த சேட்டையை பொறுத்துக் கொண்டு அங்கிருந்து சென்ற வீடியோ வைரலாகி உள்ளது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Mustafagingee1/status/1656614221302341635

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback