Breaking News

தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரி கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை காலத்தை ஒட்டி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்றும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 

விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும் என்றும், அடுத்தாண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback