நிலத்தகராறில் பட்டபகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை அதிர்ச்சி வீடியோ
துப்பாக்கி சூட்டில் மூன்று பெண்கள், உட்பட ஆறு கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்
மத்தியப்பிரதேசம் மொரீனா மாவட்டம், லேபா எனும் கிராமத்தில் வசித்துவந்த இரு கஜேந்திர சிங் மற்றும் தீர் சிங் குடும்பத்தினரிடையே கடந்த 2013ம் ஆண்டு முதல் நிலத்தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் இரு குடும்பத்தாரும் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர் இதனால் கோபமுற்ற கஜேந்திர சிங்கின் வீட்டை தீர் சிங் ஆயுதங்களால் தாக்கினார்.இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கட்டைகள், கற்கள் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் கஜேந்திர சிங்கின் வீட்டையும் தீர் சிங் குடும்பத்தினர் சேதப்படுத்தினர்.
மேலும் கஜேந்திர சிங் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை திர் சிங் குடும்பத்தினர் சுட்டுக் கொன்றனர்.மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்
நிலத்தகராறு மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/prashantanandg/status/1654381981067796480
Tags: இந்திய செய்திகள்