Breaking News

+2 முடித்த ஏழை மாணவர்கள் மேற்படிப்பு படிக்க உதவும் நடிகர் விஷாலின் தேவி அறக்கட்டளை

அட்மின் மீடியா
0

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தன் அம்மாவின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவி செய்துள்ளார்

தமிழகத்தில் இன்று +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில்ன் நடிகர் விஷால் தரப்பில் அவரது ரசிகர் மன்ற சார்பில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.அந்த அறிக்கையில்

பிளஸ்+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் விஷால் அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டும். 

தோல்விகள் வாழ்க்கையில் இயல்பு தான். ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து படித்து, மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், அன்பான சொந்தங்களுக்கும் வணக்கம்.வருடம்தோறும் பிளஸ்+2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு படிக்க இயலாத வறுமைக்கோட்டிற்க்கு உட்பட்ட மாணவ, மாணவிகளை நமது அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் படிக்கவைத்து வருகிறார்.

அதேபோன்று இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களின் பதிவு நடைபெற்று வருகிறது.நமது மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பிளஸ்+2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி, தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ, மாணவிகள் குறித்த முழு விபரங்களையும் நமது ‘தேவி அறக்கட்டளை’ மின்னஞ்சல் devifoundationchennai@gmail.com முகவரிக்கு அனுப்புங்கள்.

அவர்களின் மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு, அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிகள் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback