Breaking News

கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழப்பு! மீட்பு பணிகள் வீடியோ

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21பேர் உயிரிழந்துள்ளார்கள்

கேரள மாநிலம் மலப்புரம் அருகே 2 அடுக்கு சுற்றுலா படகு எதிர்பாரத விதமாக கடலில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, தலா ₹2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் சுற்றுலா படகு நேற்று மாலை 7 மணியளவில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட 22 பேர் பரிதாக உயிரிழந்தனர். 

படகில் பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது..உரிய அனுமதி பெறாமல்  அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.  படகில் குறைந்தது 30 முதல் 40 பேர் இருந்திருக்கலாம் என தெரிகின்றது.


மீட்பு பணி வீடியோ பார்க்க:-

https://twitter.com/dhananjaynews/status/1655376557492559872

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback