Breaking News

பேருந்துகளில் ரூ.2000 நோட்டு வாங்கப்படும் அமைச்சர் சிவசங்கர்

அட்மின் மீடியா
0

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில்  செவ்வாய் கிழமை முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட பேருந்துகளில் பொதுமக்கள் பயணச்சீட்டு வாங்குவதற்காக 2000 ரூபாய் நோட்டு தாள்களை வழங்கினால் நடத்துனர்கள் அதனை வாங்க கூடாது என்று போக்குவரத்து மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அரசு பேருந்துகளில் பயணிகள் தரும் ரூ.2000 நோட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பயணிகள் தவிர வெளிநபர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி இல்லை எனவும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback