இரண்டு கைகளையும் இழந்த மாணவன் 10 ம் வகுப்பில் 437 மதிப்பெண் எடுத்து சாதனை செயற்கை கைகள் பொறுத்த முதல்வர் உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்த க்ரித்தி வர்மா எனும் மாணவன் தனது 2 கைகளையும் இழந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து தான் படித்த அரசுப்பள்ளியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் தன் மகனுக்கு அரசு உதவ வேண்டும் எனவும் அவனுக்கு கைகள் பொருத்தி நம்பிக்கை தந்தால் நன்றாக இருக்கும் என கணவனின்றி வாழும் க்ரித்தி வர்மாவின் தாய் கஸ்தூரி கண்ணீருடன் பேட்டி அளித்திருந்தார்.
இந்த செய்தியினை கேள்விபட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது.மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள் அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன்.
அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்” என உறுதி அளித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்