கொரோனா தொற்றால் தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழப்பு முழு விவரம்
தூத்துக்குடியில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று காரைக்காலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காரைக்கால் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன்( 55 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயது நுரையீரல் புற்றுநோயாளிக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இரண்டாம் நிலை செப்சிஸ், கடுமையான சிறுநீரக காயம் மற்றும் தற்செயலான கோவிட்-19 பாசிட்டிவ் ஆகியவற்றுடன் இடது நுரையீரல் புற்றுநோயாக இறப்புக்கான காரணம் பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் 100 ஐ கடந்து நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. நேற்று கொரானா பாதித்த புதியவர்கள் எண்ணிக்கை 186 ஆக உள்ளது
Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்