எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம் முழுவிவரம்
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதம்!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு இருந்தனர். அதேபோல் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று கர்நாடகா தேர்தலை சுட்டிகாட்டடி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன்படி, அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்து, இரட்டை இலை சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றது செல்லும் எனவும் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் பதிவேற்றம் செய்ததாக தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
Tags: அரசியல் செய்திகள்