Breaking News

ரத்ததில் ஓவியம் வரைவதற்க்கு தடை சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ரத்தத்தில் ஓவியம் வரையக்கூடிய புதிய கலாசாரம் அதிகரித்து வருகிறது; இவ்வகை ஓவியங்கள் வரைய மற்றும் ரத்த ஓவிய கூடங்கள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது சட்டப்பேரவையில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 



சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 

தமிழ்நாட்டில் நகர பகுதிகளில் இரத்தத்தில் ஓவியங்கள் வரைவது தற்பொழுது கலாச்சாரமாக இருந்து வருகிறது காதலை வெளிப்படுத்தும் விதமாக ரத்தத்தில் ஓவியம் வரைவதால் நோய் தொற்றை ஏற்படுத்துவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது போன்ற ஓவியங்களை வரைவதற்கு ரத்த ஓவியக் கூடங்கள் செயல்படுவதாவும், அதனால் ரத்த ஓவியம் வரைவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback