Breaking News

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாத தாக்குல் 5 ராணுவ வீரர்கள் பலி முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 


ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது, இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், மற்றும் படுகாயமடைந்த ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் தற்போது இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பயங்கரவதிகள் கையெறி குண்டு வீசியதில் தான் ராணுவ வாகனம் தீ பிடித்துள்ளதை விசாரணையில் ராணுவம் கண்டறிந்துள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback