Breaking News

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது 

 


சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழைய கட்டிடத்தின் 4வது தளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தநிலையில் இன்று அந்த 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என தீவிர தேடுதல் நடைபெற்று வருகின்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கட்டிட விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரனையில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்ததாக கட்டிடத்தை புணரமைக்கும் பணியில் 10 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் சுமார் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback