Breaking News

பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மாற்றம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு.


தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் பிளஸ் 12 பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று தற்போது மதிப்பெண்கள் இனையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கு பின்பு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் அதன்படி, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பின்பு வெளியிடுவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். விரைவில் இதற்க்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback