Breaking News

பிளஸ் 2 கணிதத் தேர்வில் 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் தேர்வுத்துறை அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி, கடந்த 03ம் தேதி நிறைவு பெற்றது. கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாளில் 47(b)க்கான கேள்வி முழுமை பெறாமல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் அனைவரும் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில் கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் விடை அளிக்க முயற்சி செய்திருந்தால், அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்ணாக 5 மார்க்  வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback