Breaking News

12 மணிநேர வேலை சட்ட மசோதாவிற்க்கு எதிர்ப்பு - மே 12ல் தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் போராட்டம்.!

அட்மின் மீடியா
0

12 மணிநேர வேலை சட்ட மாசோதாவை திரும்பப் பெறக்கோரி மே 12ல், தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முடிவு.

தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்படுகிறது. 

எனவே இந்த 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என திமுக கட்சியினர் கட்சியினர் இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும், இந்த சட்டம் மூலம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், தொழிலாளர்களின் உரிமை பாதிக்கும் என கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். 

இந்த நிலையில், 12 மணி நேர வேலை தொடர்பான 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த விளக்கத்தில்

வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை, விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் எனவும் பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் மேலும் விளக்கமளித்தார். எந்தவொரு தொழிற்சாலையாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக் கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லையென்றால், நிச்சயமாக அரசு பரிசீலனை செய்து, ஆய்வு செய்துதான் நடைமுறைப்படுத்தப்படும்" என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறினார்

இதனை அடுத்து இன்று தமிழக அமைச்சர்கள் தமிழகத்தில் உள்ள முக்கியமான தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தமிழக அமைச்சர்கள் ஏ.வ .வேலு, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் இந்த பேச்சுவார்தையில் ஈடுபட உள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை திருத்த சட்டம் பற்றி அமைச்சர்கள் விளக்கம் கொடுப்பார்கள் எனவும், தொழிற்சங்க நிர்வாகிகள் அவர்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப்பெற கோரி, மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 27ம் தேதி இது குறித்த நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவிதுள்ளனர். தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback