சத்திஸ்கரில் நக்சல் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 11 பேர் பலி
சதீஷ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதில் 10 வீரர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட 11 உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 11 ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரன்பூரில் நக்சலைட்கள் நடத்திய இந்த தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மூண்ட மோதல் நீடித்து வருகிறது. நக்ஸல் தாக்குதலில் பலியான ஜவான்கள் ரோந்து முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்காக வந்த டிஆர்ஜி படை மீது வெடிகுண்டு தாக்குதலில் 10 DRG ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் வீரமரணம் அடைந்துள்ளார்கள்
Tags: இந்திய செய்திகள்