அதிகரிக்கும் கொரானோ | அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு mask mandatory govt hospital tamil nadu
தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியிருந்தார் இந்நிலையில் .தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர், நாளை 01.04.2023 முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்
நாளை முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். என கூறினார்
Tags: தமிழக செய்திகள்