Breaking News

முத்திரை தாள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் - பதிவுத்துறை கடும் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது


தமிழகத்தில் பத்திர பதிவு நடைமுறையில் முத்திரைத்தாள் அவசியமான ஒன்றாக உள்ளது. முத்திரை தாள்கள் அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனையடுத்து பதிவுத்துறை, முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. 

மேலும் முத்திரைத்தாள்களில் குறிப்பிட்டுள்ள விலையின் படியே மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் ,முத்திரைதாள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் வந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்அதனை தொடர்ந்து இந்த முறைகேடை தடுப்பதற்கு முத்திரைத்தாள் விற்பனை செய்யப்படும் இடங்களில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் அதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பத்திரப் பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback