Breaking News

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அட்மின் மீடியா
0

அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபட்டது

 


நேற்று அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு நாளை முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்டவிதி: 20 (அ); பிரிவு - 2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, "கழகப் பொதுச் செயலாளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்ற விதிமுறைக்கு ஏற்ப "கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்கான தேர்தல் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும். 

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் நாள்:- 18.03.2023 - சனிக் கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ) வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்:- 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு பரிசீலனை:- 20.03.2023 திங்கட் கிழமை காலை 11 மணி வேட்பு மனு திரும்பப் பெறுதல்:- 21.03.2023 - செவ்வாய் கிழமை பிற்பகல் 3 மணி வரை வாக்குப் பதிவு நாள்:- 26.03.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை:- 27.03.2023 திங்கட் கிழமை காலை 9 மணி முதல் கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்குப் போட்டியிட கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில்விரும்பும் கட்டணத் தொகை ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கழக சட்ட விதி - 20அ; பிரிவு - 1, (a), (b), (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம். "கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.என அறிவிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து இன்று பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் அவசர முறையீடு செய்துள்ளார். இந்த முறையீட்டை அவசர வழக்காக மனுதாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓபிஎஸ் தரப்பு மனு விசாரணைக்கு வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் இவரை விட சர்வாதிகார அரசியல்வாதி யாரும் இருக்க முடியாது முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்.ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம். எங்கள் பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறினார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback