அதிகரிக்கும் கொரோனா மக்கள் பதற்றப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அதிகரிக்கும் கொரோனா மக்கள் பதற்றப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்
மஹாராஷ்ட்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில், உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது. மக்கள் பதற்றப்பட தேவையில்லை என தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்