Breaking News

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை தமிழ்நாடு அரசு செய்தி

அட்மின் மீடியா
0

நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர். குருவிக்காரர் இனங்களை தமிழ் நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்ததது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டதன் விளைவாக தமிழ்நாடு அரசின் கருத்துருவான "நரிக்குறவன், குருவிக்காரன்" சமூகங்களை மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் 37 வது இனமாக சேர்த்து ஒன்றிய அரசு அரசிதழ் வெளியிட்டது. அதற்கேற்ப தமிழக அரசும்மேற்காணும் சமூகத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும்நலத்திட்டங்களை பெறுவதற்கான தகுதியடைய ஏதுவாக அரசாணை (நிலை) எண்.38.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(சா.மெ.1)துறை. நாள்17.03.2023 வெளியிட்டுள்ளது. 

மேலும்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர்அவர்களை"நரிக்குறவன்.குருவிக்காரன்"எனவெளியிடப்பட்டுள்ளதை "நரிக்குறவர்,குருவிக்காரர்"வெளியிடகோரியுள்ளார்.இதற்கானஅரசிதழில்என திருத்தம்பணிகளை ஒன்றிய அரசுமேற்கொண்டு வருகின்றது இதற்கிடையில்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு மாணாக்கர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதால், வரும் கல்வியாண்டிலேயே இப்பிரிவுகளைச் சேர்ந்தஅனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக, காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு ஒன்றிய  அரசு வெளியிட்டவாறே, தமிழ்நாடு அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு கோரியவாறு பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு தனது திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடும்போது தமிழ்நாடு அரசும் அதனை திரும்ப வெளியிடும்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback