Breaking News

அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு முழு விவரம்

அட்மின் மீடியா
0

அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு முழு விவரம்



மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் இன்ஃப்ளூயன்சாவுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யலாம். மற்ற நேரங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

ப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 7 நாட்கள் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து எடுக்க வேண்டும். 

அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

லேசான காய்ச்சல், இருமல் பாதிப்பு கொண்டவர்கள் ஏ வகை. தீவிர காய்ச்சல் அதிக இருமல் கொண்டவர்கள் பி வகை. 

தீவிர காய்ச்சல் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர், இணைநோய் இருப்போர் என 2 வகைகளில் இருப்பவர்களுக்கு இன்புளூயன்சாவுக்கான பரிசோதனையோ, மருத்துவமனை அனுமதியோ தேவையில்லை. இவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தால் போதுமானது.

ப்ளூ காய்ச்சல் தடுப்பூசியை கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய் உள்ளோரும் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதே போல் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனை தவிர மற்ற நேரங்களில் வெளியே செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் 7 நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேவேலை சி வகை பாதிப்பான தீவிர காய்ச்சல், தொண்டை வழி, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த குறைவு இருந்தால் மட்டும் இன்புளூயன்சா வைரசுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் இந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் 104 மற்றும் 108 ஆகிய 2 எண்களை தொடர்பு கொண்டு இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள், ஆலோசனை மருத்துவ பெறலாம்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணி புரிவோர், ஆய்வங்களில் பணி புரிவோர் கட்டாயம் என்95 முகக்கவசம் அணிய வேண்டும். மற்றவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய் உள்ளோரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

65 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள், 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ப்ளூ தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback