Breaking News

கொசுவர்த்தியால் விபரீதம் ஒரே வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 6 பேர் முழு விவரம்

அட்மின் மீடியா
0

டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.


 

டில்லியில் சாஸ்திரி பார்க் குடியிருப்பு ஒன்றில் அவர்கள் தூங்கி கொண்டிருந்த போது கொசுவை விரட்ட அவர்கள் வைத்த கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து அதனால் உண்டான கார்பன் மோனாக்ஸைடு நச்சுப்புகையினை இரவு முழுவதும் அவர்கள் சுவாசித்துள்ளனர். இதனால் அவர்கள் மயக்கமடைந்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். 

காலையில் வீட்டில் இருந்து வரும் புகை காரணமாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே செல்லும்போதே காவல் அதிகாரிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது,இருந்த 6 பேரும் மூச்சு பேச்சு இல்லாமல் கீழே சரிந்து கிடந்துள்ளனர். 

இதையடுத்து அவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களது உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கொசுவை விரட்டுவதற்காக கொளுத்தி வைத்திருந்த கொசுவர்த்திச் சுருள் மெத்தையில் விழுந்து தீ பிடித்துள்ளது. அதனால் உண்டான கார்பன் மோனாக்ஸைடு நச்சுப்புகையினை இரவு முழுவதும் சுவாசித்ததால் அதில் 6 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது  அதில், 4 பேர் ஆண்கள். ஒருவர் பெண் மற்றொருவர் குழந்தை என தெரிய வந்துள்ளது. போலிசார் மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றார்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback