Breaking News

ஏப்ரல் 5 ம்தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.

பங்குனி உத்திரத்தை ஒட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

பங்குனி உத்திரத் திருவிழா வருகிற ஏப்ரல் ஐந்தாம் தேதி கொண்டாடப்பட உள்ளது இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொது தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூ று ஏற்படாத வகையில், பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback