ஏப்ரல் 5 உள்ளூர் விடுமுறை...மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு april 5 local holiday
அட்மின் மீடியா
0
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேற்கண்ட தேதியில் பொது தேர்வு இருந்தால் அந்த தேர்வுகள் நடைபெறும் எனவும் மற்ற மாணவர்களுக்கு விடுமுறை எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் ஐந்தாம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் ஆறாம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறதுஅன்றைய தினம் உயர்கல்வி மாணவ மாணவியருக்கு மட்டும் வேலை நாள் பொருந்தாது எனவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்