கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் மத்திய அரசு ஒப்புதல்
உஜ்வாலா திட்டத்தில் ஆண்டிற்கு 12 சிலிண்டர் பெறுவோருக்கு சிலிண்டருக்கு 200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்தவகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் ஆண்டிற்கு 12 சிலிண்டர் பெறுவோருக்கு ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 200 மானியம் வழங்குவதை அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.200 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் பட்டத்தில் அவர்களுக்கு 950 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும்.
Tags: இந்திய செய்திகள்