Breaking News

குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 யாருக்கு கிடைக்கும் யாருக்கு கிடையாது விரைவில் வழிகாட்டு நெறிமுறை

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அதில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது" எனத் தெரிவித்து இருந்தார்.



இந்நிலையில் யாருக்கு கிடைக்கும் யாருக்கு கிடையாதுஎன்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், குடும்பத் தலைவிக்கான ரூ 1000 உரிமை தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் பெண்கள் பயனடைய முடியாது. ரூ 1000 உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைய வாய்ப்புள்ளது.ரூ 7000 கோடிஇந்த நிதியாண்டில் 6 மாதங்களே உள்ளதால் இந்த திட்டத்திற்கு ரூ 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த உரிமைத் தொகை மற்ற திட்டங்களை போல வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படும். இந்த 1000 ரூபாய் மாதந்தோறும் யாருக்கு கிடைத்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவியாக இருக்குமோ அந்த நபர்களுக்கெல்லாம் இந்த உதவித் தொகை கிடைக்கும் என கீதா ஜீவன் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback