மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம் முழு விவரம் IAS transfer
அட்மின் மீடியா
0
மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம் முழு விவரம் IAS transfer
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக உள்ள அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக உள்ள வளர்மதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்
சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் எஸ்பி. சக்தி கணேசன், சிலைக்கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு எஸ்பியாக நியமனம்.
ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன், மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம்.
சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்.பியாக நியமனம்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவுளி ப்ரியா, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் எஸ்.பியாக நியமனம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்