மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அறிக்கும் தகவல்கள், நீதிமன்ற வழக்குகள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்