இரிடியம் முதலீடு மோசடி - பொதுமக்களுக்கு டிஜிபி எச்சரிக்கை வீடியோ
அட்மின் மீடியா
0
இரிடியம் முதலீடு என்ற பெயரில் பெரிய் மோசடி நடந்து வருவதாகவும், பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த சில நாட்களாக இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அக்கும்பல் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்தும் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும். இரிடிய முதலீடு என்ற பெயரில் யாரேனும் உங்களை அணுகினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி வைரல் வீடியோ