இனி ஆவின் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்
அட்மின் மீடியா
0
ஆவின் பணி நியமனங்கள் ஆவின் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் பணி நியமனத்திற்காக பணம் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆவின் பணி நியமனத்தையும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் கீழ் கொண்டு வரும் படி உத்தரவிட்டுள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
இதனைத் தொடர்ந்து ஆவினில் 322 பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளதுஇந்நிலையில் மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய ஆவின் நிறுவனத்தில் உள்ள 26 வகையான 322 காலிப் பணியிடங்களை இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்