Breaking News

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 2  மணியளவில் அவருடைய அடகுகடையில் திடிரென 3 பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள் கொண்டு அவரை சராமாரியாகத் தாக்கியது. தப்பில் செல்ல கடையைவிட்டு வெளியே ஓட முயன்ற முத்துக்குமாரை அந்தக் கும்பல் ஓட, ஓட வெட்டிக் கொலைசெய்தது இதில் சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் உயிரிழந்தார்.  

சம்பவம் கேள்விபட்டு சிப்காட் காவல் நிலைய போலீஸார், உயிரிழந்த முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback