Breaking News

தாம்பரம் வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் - அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு

அட்மின் மீடியா
0

அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவு

தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட அறிவுறுத்தல்


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்:-

நமது கழக பேருந்துகளில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்த Shed- க்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுனர், நடத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர்கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.மேலும் மாலை 05.00 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கசாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்.

பயணிகளின் வசதிக்காக வெளியூரிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் வழியாக சென்னைக்கு வரவேண்டும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பயனடைவார்கள் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.மேலும் மாலை 5மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னை வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியைப் பயன்படுத்தி சென்னை கோயம்பேடு வருமாறு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் அறிக்கையில் கூறியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback