Breaking News

தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்..தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

தென் மாவட்ட மக்களின் குறைகளை போக்கும் வகையில் தேஜஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் 6 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரை சென்று விடும்.ஆனால் சென்னையில் இருந்து கிளம்பும் இந்த அதிவேக ரயில் திருச்சியில் மட்டுமே இடையில் நிற்கும். தாம்பரத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் தாம்பரத்தில் நின்று செல்ல கோரிக்கை விடுத்தனர். 


இந்த கோரிக்கையின் அடிப்படையில் நாளை பிப்ரவரி 26 முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆன,சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback