Breaking News

ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள குறைதீர் முகாம் உடனே முகாம் செல்லுங்க

அட்மின் மீடியா
0

ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள குறைதீர் முகாம்  நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம்மாதந்தோறும் நடத்தப்படுகிறது.  அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (பிப்.11) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை,நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். 

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகம் தொடர்புடைய பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback