Breaking News

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஆதார் எண் அவசியம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஆதார் எண் அவசியம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வழியாக மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கப்பட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையானது நாளது வரை மாதந்தோறும் ரூ.2000/- அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது பயனாளிகளில் சுய விவரங்களான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி புத்தக புகைப்படம் 1, மனவளர்ச்சி குன்றியோராயிருப்பின் பெற்றோர்களுடன் இணைந்த புகைப்படம் 1, தனித்துவம் வாய்ந்த, தேசிய அடையாள அட்டை (UDID) பெற்றுயிருப்பின் அதன் நகல் ஆகிய சான்றுகளை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.தாங்கள் டிசம்பர் 2022 மாதம் வரை பராமரிப்பு உதவித்தொகை பெற்று ஜனவரி -2023 மாதம் உதவித்தொகை பெறபடாதவர்கள் மட்டும், பராமரிப்பு உதவிதொகை தொடர்ந்து பெற வேண்டுமாயின் தாங்கள் உடனடியாக மேற்காணும் சான்றுகளை, இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காஞ்சிபுரம் (அலுவலக தொலைபேசி எண் - 044 29998040) என்ற அலுவலகத்தில் 17.02.2023 வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பித்து தங்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையினை பெற்று பயனடையுமாறு, ஆட்சியர் ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback