Breaking News

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் Tamil Nadu moves Supreme Court challenging NEET

அட்மின் மீடியா
0

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதியதாக மனுத் தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் இருந்து விலக்குக்கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ரவி, நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்து பின்னர் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். 

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதியதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback